இலங்கையில் சற்று முன்னதாக மேலும் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
சற்று முன்னதாக மேலும் 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்ற உறுதி செய்யப்பட்ட 211 பேரில் தனிமைப்படுத்தலில் இருந்த 9 பேரும், ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 202 பேரும் உள்ளடங்குவதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 140 பேர் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை