3 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அக்குழந்தையின் தாயாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மதுகம வலல்லாவிட பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மாத சிசுவுக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வலல்லாவிட, மாகலன்தாவ பிரதேசத்தை சேர்ந்த சிசு ஒன்றுக்கே இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வலல்லாவிட பொது சுகாதார பரிசோதகர் திலகரத்ன அதுகோரால தெரிவித்தார்.
குறித்த சிசுவின் தாலாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த சிசு மற்றும் தாய் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை