ஆனையிறவு பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய கிளிநொச்சியை சேர்ந்த தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
2ம் இணைப்பு....
ஏ-9 நெடுஞ்சாலையில் ஆனையிறவு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் தாங்கி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ் அநர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் யாழ்ப்பாணம் நீராவியடி பகுதியை சேர்ந்த 58 வயதான ராதாகிருஸ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய ராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
வித்துக்குள்ளான குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகனும் படுகாயமுற்ற நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அவசசிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் தாங்கியை செலுத்திவந்த சாரதி பொலிசாரால் கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னைய செய்தி....
ஆனையிறவு பகுதியில் சற்று முன்னதாக ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஏ-9 நெடுஞ்சாலையில் பயணித முச்சக்கர வண்டியும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் தாங்கி வாகனமும் சற்று முன்னதாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி முன்பக்கமாக மேதுண்டதில் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்