யாழ்.பரிசோதனைக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொடர்பிலான பீசீஆர் பரிசோதனையில் 40 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் வெளியிடுகின்ற அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
28.10.2020 - 11 pm - இன்றைய பரிசோதனையில்
விடத்தல்பளையில் இருக்கின்ற தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பருத்தித்துறையை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி மூவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள். தப்போது தனிமைப்படுத்தளில் இருப்பவர்கள்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேருக்கான Covid-19 தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்