Friday 19th of April 2024 11:15:18 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.பரிசோதனைக் கூடம்; நாற்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.பரிசோதனைக் கூடம்; நாற்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


யாழ்.பரிசோதனைக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொடர்பிலான பீசீஆர் பரிசோதனையில் 40 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் வெளியிடுகின்ற அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

28.10.2020 - 11 pm - இன்றைய பரிசோதனையில்

விடத்தல்பளையில் இருக்கின்ற தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பருத்தித்துறையை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி மூவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள். தப்போது தனிமைப்படுத்தளில் இருப்பவர்கள்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேருக்கான Covid-19 தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE