Thursday 18th of April 2024 09:24:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
வடமராட்சி தொற்று எதிரொலி: மயிலிட்டி துறைமுகத்தில் 30 பேருக்கு பிசிஆர் சோதனை!

வடமராட்சி தொற்று எதிரொலி: மயிலிட்டி துறைமுகத்தில் 30 பேருக்கு பிசிஆர் சோதனை!


பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு வடமராட்சியில் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதன் பின்னணியில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் இன்று 30 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு அங்கு சென்று திரும்பிய கூலர் வாகன தரப்பினர் அடையாளம் காணப்பட்டு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதற்கமைவாக வடமராட்சி பருத்தித்துறையில் சிலர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்ட கூலர் வாகனத் தரப்பினர் மயிலிட்டி துறைமுகப் பகுதிக்கு தினசரி சென்று மீன்களை கொள்முதல் செய்து பேலியகொட மீன் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவது வழமையாகும்.

இதையடுத்து தெல்லிப்பளை பிரதேச செயலகத்தார் மற்றும் தெல்லிப்பளை சுகாதார பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் இன்று மயிலிட்டி மீன்டபிடித் துறைமுகத்தில் 30 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட் உள்ளதாக அருவி இணைத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

துறைமுக பணியாளர்கள், துறைமுகத்தில தரித்து நிற்கும் தென்னிலங்கை மீனவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருக்கும் உள்ளுர் தரப்பினர் மற்றும் மீனவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட 30 பேருக்கு இவ்வாறு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தெல்லிப்பளை பிரதேச செயலக தரப்பினர் அருவி இணையத்திற்கு தகவல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE