Friday 19th of April 2024 12:52:49 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிண்ணியா பிரதேசத்தில்  அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டன!

கிண்ணியா பிரதேசத்தில் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டன!


கிண்ணியா பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளையும் மூடுவதாக கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் ஹிதாயத்துள்ளா மெளலவி தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தம்பலகமம் திருகோணமலை போன்ற பிரதேசங்களில் கொரோனா நோய் பரவுவதன் காரணமாக கிண்ணியா பிரதேசத்திலுள்ள பள்ளிகளை மூடுவதனால் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பதன் மூலம் சமூக பரவலைத் தடுக்கும் முகமாக பள்ளிகளை மூடுவது கிண்ணியா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் தெரிவித்தார்

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் இன்றிலிருந்து மூடுவதாக தெரிவித்தார்

நேற்று முன்தினம் இரவு (27) இடம்பெற்ற கொரோனா நோய் கட்டுப்பாட்டு குழுவினரின் கூட்டத்தின் போது இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

எனவே கிண்ணியா பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய ஐவேளைத் தொழுகையினை (மத அனுஷ்டானங்களை) தங்களுடைய வீடுகளிலேயே நிறைவேற்றிக் கொள்மாறும், கொரோனா நோயிலிருந்து சமூகத்தை தடுப்பதற்காக பொதுமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு வழங்குமாறும் தெரிவித்தார்

திருமணம் நிகழ்வுகளை இந்த காலப்பகுதியில் நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்தார்


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE