Thursday 18th of April 2024 06:37:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
நாட்டில் கொரோனா வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிறைந்தன!

நாட்டில் கொரோனா வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிறைந்தன!


நாட்டில் மிக வேகமாக அதிகரித்துவரும் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளர்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களால் நிறைந்துள்ளதாக சுகாதாரத் துறை சார் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக, தனிமைப்படுத்தல் நிலையங்கள் சிலவற்றை மருத்துவமனைகளாக மாற்றுவது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது.

இதனிடையே கிளிநொச்சி மாவட்டம் கிருஷ்ணபுரம் பகுதியில் 200 படுக்கைகளைக் கொண்டதாக சிறப்பு வைத்தியசாலை திறக்கப்படும் என்று தெரியவருகிறது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான கொரோனா சிறப்பு வைத்தியசாலை மாங்குளத்தில் திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை அங்கு 30 படுக்கை வசதிகள் மட்டுமே முதலில் திட்டமிடப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றுக்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் உள்ள கொரோனா சிறப்பு வைத்தியசாலையில் 50 படுக்கை வசதிகள் காணப்படுகின்ற போதிலும் அவை முழுமையாக நோயாளர்களால் நிறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE