Monday 18th of March 2024 10:00:25 PM GMT

LANGUAGE - TAMIL
-
பிரதான பி.சி.ஆர். இயந்திரம் பழுது!  20,000 பரிசோதனை முடிவுகள் தாமதம்?!

பிரதான பி.சி.ஆர். இயந்திரம் பழுது! 20,000 பரிசோதனை முடிவுகள் தாமதம்?!


இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (MRI) உள்ள பிரதான பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் செயலிழந்துள்ள நிலையில் அதனை சீரமைக்க சீன நிபுணர் ஒருவர் இலங்கைக்கு வரவுள்ளதாக தேசிய கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணி தெரிவித்துள்ளது.

இலங்கையின் முக்கிய பி.சி.ஆர் இயந்திரமாக விளங்கும் இது ஒரு நாளைக்கு 1200 பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது என தேசிய கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணி தலைவர் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இந்த இயந்திரம் செயலிழந்துள்ளதால் தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் சிக்கலால் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பரிசோதனை முடிவுகளை தாமதமாகியுள்ளதாக அருண சிங்களப் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையிலேயே இந்த பிரச்சினையை விரைவாகத் தீர்க்க சீனாவிலிருந்து ஒரு நிபுணரை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதுவரை ஒரு பி.சி.ஆர். இயந்திரம் மட்டுமே நாட்டில் செயல்படவில்லை எனவும் அவா் கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE