யாழ்ப்பாணம் வடமராட்சியில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் உள்ளவர்கள் அவர்களின் வீடுகளிலேயே தற்போதும் (நண்பகல் 12 மணிவரை) உள்ளதாக தெரியவருகிறது.
அவர்களை ஏற்றிச் செல்வது தொடர்பிலான தகவல்கள் எதுவும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரியவருகிறது.
யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி வைத்தியசாலை உட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளும் நோயாளர்களால் நிறைந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் நோயாளர்களை எங்கு பராமரிப்பது என்ற சிக்கல் காரணமாக அவர்களை அங்கிருந்து ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கருதப்படுகிறது.
வடமராட்சியின் பருத்தித்துறை, கரவெட்டி பகுதிகளைச் சேர்ந்த மூவர் நேற்று அடையாளம் காணப்பட்டிருந்தமை தெரிந்ததே.
சில நாட்களுக்கு முன்னர் பருத்தித்துறை மற்றும் குருநகர் பகுதிகளில் அடையாளம் காணப்பட்டவர்கள் மருத்துவத்துக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி, பருத்தித்துறை