இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20-ஆவது திருத்தச் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
20-ஆவது திருத்தச் சட்ட ஆவணத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சிறிது நேரத்துக்கு முன் கையெழுத்திட்டார்.
வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டம் பாராளுமன்றில் சபாநாயகர் தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.