கொரோனாவின் தாக்கத்தையடுத்து கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்காரணமாக இன்று கொழும்பிலிருந்து வெளியேற வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் முயற்சித்தனர்.
இதனால் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகே அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேல் மாகாணத்தை விட்டு மக்கள் எவரும் வெளியேற வேண்டாம் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்ததையடுத்து வீதிகளில் நிறைந்திருந்த வாகனகளைப் பொலிஸார் திருப்பி விட்டனர். குறிப்பிட்ட சிலரே கொழும்பிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, மேற்கு மாகாணம், கொழும்பு