மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு நுவரெலியாவில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணியுடன் தொடர்பட்டு இதுவரை நுவரெலியா மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் இமேஸ் பிரதாப சிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக மினுவாங்கொட கொத்தணியில் 8 தொற்றாளர்களும் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு 25 தொற்றாளர்களும் நுவரெலிய மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாற தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புகளை பேணியவர்கள் என்ற அடிப்படையில் 41 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை