Wednesday 24th of April 2024 08:29:58 PM GMT

LANGUAGE - TAMIL
-
அம்பாறை காரைதீவில் காட்டுயானைகளால் சொத்தழிவு!

அம்பாறை காரைதீவில் காட்டுயானைகளால் சொத்தழிவு!


காட்டு யானை தாக்கியதில் நெல் களஞ்சியம் உட்பட தோட்டப்பயிர்கள் சேதமடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவில் வெள்ளிக்கிழமை(30) இரவு இச்சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் விவசாய நடவடிக்கையின் போது பயிரிடப்பட்டிருந்த வீட்டுத்தோட்டம் உட்பட நெற்களஞ்சிய அறை என்பன சேதமாக்கப்பட்டதுடன் உரப்பையில் பாதுகாப்பாக கட்டப்பட்ட நெல் மூடைகள் சேதமாக்கப்பட்டிருந்தன.

ஐந்து யானைகள் கடும் மழைக்கும் மத்தியில் ஊருக்குள் நுழைந்து அழிவை ஏற்படுத்தியுள்ளன.

இதே வேளை அப்பகுதியில் வீட்டு மதில் சுவர்களையும் சேதமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE