Friday 29th of March 2024 06:54:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியில் முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்!

கிளிநொச்சியில் முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்!


கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று சற்று முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பரிசோதனைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைக் கூட முடிவுகளின் அடிப்படையில் குறித்த முடிவு வெளியாகியுள்ளது.

கொழும்பில் விருந்தகம் ஒன்றில் பணியாற்றியிருந்த நபர் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம், 03ஆம் யூனிற் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டுக்குத் திரும்பியிருந்த நிலையில் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நாள் வரையில் இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE