Wednesday 24th of April 2024 02:55:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
சமூகத்துக்குள் கொரோனா தாண்டவம்  உண்மைத் தகவல்களை மூடி மறைக்கின்றது அரசு, லக்ஸ்மன் கிரியெல்ல!

சமூகத்துக்குள் கொரோனா தாண்டவம் உண்மைத் தகவல்களை மூடி மறைக்கின்றது அரசு, லக்ஸ்மன் கிரியெல்ல!


"இலங்கையில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், அது தொடர்பான தகவல்களை அரசு மூடி மறைத்து வருகின்றது."

- இவ்வாறு எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி விளக்கமளித்திருந்தார்.

இதன்போது எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்‌ஸ்மன் கிரியெல்ல தனது நிலைப்பாட்டை முன்வைத்து உரையாற்றினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவலாகப் மாறியுள்ள போதும், இன்னும் அரசு அதனை ஏற்றுக்கொள்ளாது பொய்யான கருத்துக்களைக் கூறி உண்மைத் தகவல்களை மூடி மறைத்து, மக்களை ஏமாற்றி வருகின்றது.

இதேவேளை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமன விடயத்தில் சிக்கல்கள் இருக்கின்றன. அந்தப் பதவிக்கு தற்போது நியமிக்கப்பட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனப் பட்டியலில் பின் வரிசையில் இருந்தவர். அரசின் தேவைக்காக மோசடியான வகையில் குறித்த பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்" - என்றார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE