ஐபிஎல்-2020 ரீ-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் தகுதிச் சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ஐபிஎல்-2020 இன் லீக் போட்டிகள் நிறைவு பெற்றதை அடுத்து முக்கயத்துவம் மிக்க பிளே ஒப் சுற்று நாளை ஆரம்பமாகிறது.
லீக் போட்டிகளின் நிறைவில் 9 வெற்றிகளை பெற்று 18 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் நாளை பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.
டுபாயில் நளை நடைபெறும் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.
தோல்வியடையும் அணிக்கு இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டும் அணியுடன் விளையாடும் சந்தர்ப்பம் வழங்கப்படும். இதனால் தோற்றாலும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டி நாளைய தினம் இலங்கை-இந்திய நேரம் பி.பகல் 7.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா