ஐபிஎல்-2020 ரீ-20 தொடரின் வெளியேற்றுதல் சுற்று போட்டியில் பெங்களுர் - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
லீக் ஆட்டங்களின் நிறைவில் புள்ளிப் பட்டியலில் 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ள சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பெங்களுர் றோயல் சலஞ்சர்ஸ் அணிகள் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் மோத உள்ளன.
இன்று (இலங்கை-இந்திய நேரம்) இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் போட்டியில் வெற்றிபெறும் அணி முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கப்பட்டல்ஸ் அணியுடன் மீண்டும் மோதும் வாய்ப்பின் மூலம் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினை தக்கவைத்துக் கொள்ளும்.
இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி இறுதிப் போட்டிக்கான தகுதியை இழந்து நேரடியாக வெளியேறும் என்பது குறிப்படித்தக்கது. Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா