Friday 29th of March 2024 05:21:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
மாடு மேய்க்கச் சென்ற இளைஞன் மிதிவெடியில் சிக்கி படுகாயம்!

மாடு மேய்க்கச் சென்ற இளைஞன் மிதிவெடியில் சிக்கி படுகாயம்!


சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மித்த யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மிதிவெடி வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

22 வயதுடைய இளைஞர் ஒருவர், குறித்த பகுதியில் மாடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார்.

அங்கு மாட்டினைக் கட்டுவதற்காக நிலத்தில் அலவாங்கால் துளையிட்டபோது நிலத்தின் கீழிருந்த மிதிவெடி வெடித்துச் சிதறியிருக்கின்றது.

சம்பவத்தில் இளைஞர்கள் கால்களில் படுகாயம் அடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டிமூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிசிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE