கிளிநொச்சி ஏ - 9 வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் காயம் அடைந்துள்ளனர்.
மாலை 6.30 மணியளவில் கிளிநொச்சி மின்சார சபைக்கு அண்மித்த பகுதியில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கிய திசையில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றும் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுமே விபத்தில் சிக்கியுள்ளன.
டிப்பர் வாகனம் சடுதியாக பிரேக் அடித்தமையால் அதே திசையில் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி டிப்பரின் பின்பகுயில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.
சம்பவத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி உட்பட்ட இருவர் காயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், கிளிநொச்சி