Thursday 28th of March 2024 09:39:37 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியின் ஜெயபுரம் வடக்கு, தெற்கு பகுதிகள் முடக்கப்பட்டன! (இணைப்பு)

கிளிநொச்சியின் ஜெயபுரம் வடக்கு, தெற்கு பகுதிகள் முடக்கப்பட்டன! (இணைப்பு)


கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நபர் சமூக முடக்கலை மீறிச் செயற்பட்டமை அம்பலமானதால் ஜெயபுரம் வடக்கு, தெற்கு பகுதிகள் ஒரு நாள் தற்காலிக சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் பணியாற்றும் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 25 ஆம் திகதி கொழும்பிலிருந்து ஜெயபுரம் திரும்பியிருந்த நிலையில், அவரை சுய தனிமையில் இருக்குமாறு பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை அவர் தொடர்பில் சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணையின் போது. சுயதனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அவர் ஜெயபுரத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நடமாடியுள்ளமை தெரியவந்திருக்கின்றது.

இந்நிலையில் வடக்கு, தெற்கு ஆகிய இருபகுதிகளும் ஒரு நாள் சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அங்கு மேற்கொள்ளப்படவுள்ள விசாரணை நடவடிக்கையின் தொடராகவே நிரந்தர முடக்கல் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் வட்டாரங்களை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஜெயபுரம் பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளே செல்பவர்களும் வெளியே செல்பவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE