Friday 19th of April 2024 03:23:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
சுண்டிக்குளம் கடற்பரப்பில் பழுதடைந்த நிலையில் இந்தியப் படகு!

சுண்டிக்குளம் கடற்பரப்பில் பழுதடைந்த நிலையில் இந்தியப் படகு!


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கரைக்கு அண்மித்த கடற்பரப்பரப்பில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளான நிலையில் இந்திய மீனவர் படகு ஒன்று காணப்படுவதாக தெரியவருகிறது.

குறித்த படகினை அண்மித்த இலங்கை கடற்படையினர் காரணம் கேட்டபோது, தமது படகு இயந்திரக் கோளாறுக்கு உட்பட்டுள்ளதாக படகில் இருந்த மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இருந்தபோதிலும் தற்போதைய கொரோனா அச்சம் காரணமாக கடற்படையினர் படகினை நெருங்கவில்லை என்று தெரியவருகிறது.

இதேவேளை மற்றொரு படகு வருகை தருவதாகவும் தமது படகினை இழுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுவருவதாகவும் இந்திய மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை இன்று காலையும் மற்றொரு இந்தியப் படகு இயந்திரக் கோளாறுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறையில் தமிழ்நாடு கோடியக்கரை பகுதியினைச் சேர்ந்த மீனவர்கள் நால்வரும் கடற்படையினரிடம் தஞ்சமடைந்திருந்தமையும் தெரிந்ததே.

இயற்கை அனர்த்தம் காரணமாகவே அவர்களின் படகு செயலிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE