இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை நேற்று புதன்கிழமை ஒரு மில்லியனைத் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் உத்தியோகபூா்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பெப்ரவரி மாத இறுதியில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நாட்டில் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 28 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, ஸ்பெயினில் கோவிட்19 இறப்பு எண்ணிக்கை நேற்று புதன்கிழமை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இங்கு நேற்று 349 புதிய மரணங்கள் பதிவான நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 40,105 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்பெயினில் புதிய தொற்று நோயாளர் எண்ணிக்கை நேற்று 19 ஆயிரத்து 96 ஆல் அதிகரித்து 14 இலட்சத்து 17 ஆயிரத்து 96 ஆக பதிவாகியுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்