Friday 29th of March 2024 08:09:15 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஒன்ராறியோவில் கடந்த 7 நாட்களாக   சராசரி 1,299 பேருக்கு கொரோனா!

ஒன்ராறியோவில் கடந்த 7 நாட்களாக சராசரி 1,299 பேருக்கு கொரோனா!


ஒன்ராறியோவில் நேற்று வியாழக்கிழமை 1,575 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய தொற்று நோயாளர்கள் தொகை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மாகாணத்தில் கடந்த ஏழு நாள் சராசரி 1,299 ஆக உயர்ந்துள்ளது.

மாகாணத்தில் மிக அதிகமாக ரொராண்டோவில் நேற்று 472 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். அத்துடன் பீல் பிராந்தியம் - 448, யோர்க் பிராந்தியத்தில் - 155 மற்றும் ஒட்டாவாவில் - 91 தொற்று நோயாளர்கள் பதிவாகினர்.

லும் டர்ஹாம் பிராந்தியம் -61, வாட்டர்லூ பிராந்தியம் - 58, ஹால்டன் பிராந்தியம் – 54, வின்ட்சர் -39, ஹாமில்டன் - 30, நயாகரா - 27, மிடில்செக்ஸ்-லண்டன் - 23, சிம்கோ முஸ்கோகா- 20, கிழக்கு ஒன்ராறியோ- 12, ஹூரான் பெர்த் பகுதியில் 10 தொற்று நோயாளர்களும் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்று நோயாளர்களில் 103 பேர் மாகாணப் பாடசாலைகளுடன் தொடர்புடையவா்களாவர்.

இவர்களில் 51 மாணவர்கள், 14 ஊழியர்கள் மற்றும் அடையாளம் வெளியிடப்படாத 38 பேர் அடங்குகின்றனர்.

ஒன்ராறியோவின் 4,828 பொது நிதியுதவி பெற்ற பாடசாலைகளில் மொத்தம் 653 -இல் இதுவரை ஒரு தொற்று நோயாளராவது பதிவாகியுள்ளனர்.

ஒன்ராறியோ முழுவதும் நேற்று 39,559 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 4.3 வீதம் பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE