கனடாவில் இடம்பெற்ற தேசிய தீபாவளி கொண்டாட்டத்தில் கனடியத் தமிழர்களுடன் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இணைந்துகொண்டார்.
பிரதமருடன் ரொரண்டோ - ஸ்காபறோ ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக இவ்வாண்டு கனடிய தேசிய தீபாவளி நிகழ்வு இணைய வழியில் இடம்பெற்றது.
இதில் கனடியத் தமிழர்களுடன் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இணைய நேரலை வழியில் இணைந்து தீபாவளி வாழ்த்துத் தெரிவித்ததுடன், தீபமேற்றி தீபாவளி நிகழ்வை கொண்டாடினார்.
இது தொடர்பான புகைப்படங்களையும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது உத்தியோகபூா்வ ருவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.