கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட்டவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான சிரமதானப் பணி காலை 9 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது அங்கு சென்ற கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அதிகாரி உட்பட்ட பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் மக்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துவருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி