Friday 29th of March 2024 07:28:55 AM GMT

LANGUAGE - TAMIL
-
கடற்கரையோர வளங்களை   பாதுகாக்கும்  திட்டம் முன்னெடுப்பு!

கடற்கரையோர வளங்களை பாதுகாக்கும் திட்டம் முன்னெடுப்பு!


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தினால் முன்னெடுக்கப்படும் கடற்கரையோர வளங்களை பாதுகாக்கும் முகமாக கரையோரத் தாவரங்களை பயிரிடுவதற்கான திட்டம் இன்று (17) திருகோணமலை - கப்பல்துறை கிராமத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஆளுநரும் நிகழ்வில் பங்கேற்ற அதிதிகளும் இந்த திட்டத்தின் அடையாளமாக கண்டற்தாவர கன்றுகளை நட்டுவைத்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் அவர்கள் இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு திருகோணமலை மாவட்டம் முழுவதும் கண்டள் மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாணத்தின் அழகைப் பாதுகாக்க சுற்றுச்சூழலை நேசிக்கும் மக்கள் முன்வரவேண்டும் என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவர் வழக்கறிஞர் தர்ஷனி லஹதபுர, திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்ஷனா பாடிகோரல மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE