Friday 19th of April 2024 07:32:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
சபையில் வரவு செலவுத்திட்டம் பிரதமரால் சமர்ப்பிப்பு!

சபையில் வரவு செலவுத்திட்டம் பிரதமரால் சமர்ப்பிப்பு!


2021ம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம், நிதியமைச்சர் - பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்தராஜபக்ச தனது வரவு - செலவுத்திட்ட உரையில் சமூகத்தின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு என்று குறிப்பிட்டார்.

கல்வி முறையை மாற்றும் சீர்திருத்தங்களில் அரசாங்கத்தின் முதன்மை கவனம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி பொருளாதாரத்தை உருவாக்குவதாகும்.

இதற்கிடையில், இந்த வரவு - செலவுத்திட்டத்தின் நோக்கம் அரசாங்க செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளியை 9 முதல் 4 சதவீதமாகக் குறைப்பதாகும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

2021 பாதீட்டு திட்டத்தில் 2021ஆம் வருடம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய வணிக வரிச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்மொழியப்பட்டது.

இதேவேளை, மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கு விசேட பொருள் வரி விதிக்க வரவு - செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருட்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் வருமான வரி ஆகியவற்றுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE