2021ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் மோட்டார் வாகன உதிரிப்பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்க உள்ளதாக நிதி அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான நடப்பு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை மீண்டும் ஆரம்பித்து உரையாற்றும் போது நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், மோட்டார் வாகன உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் புடவை மற்றும் உற்பத்தியாளர்களுக்கு வரி நிவாரணம் வழங்க முன்மொழிந்துள்ளார்.
இரத்தினக்கல் ஏற்றுமதியில் மூன்று வருடங்கள் ஏற்றுமதி வரி விலக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை