முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கத்துக்கு பாம்பு திண்டியதால் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று இரவு வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் அவருக்கு பாம்பு தீண்டியுள்ளதாக தெரியவருகிறது.
உடனடியாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்.
அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக அருவிக்குத் தெரியவருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கரவெட்டி