மட்டு. வாகரையில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் சற்று முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாவீரர் வாரம் இன்று நவ-21 ஆரம்பமாகியதை அடுத்து வடக்கு கிழக்கு உள்ளிட்ட இடங்களில் நினைவேந்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வாகரை துயிலும் இல்ல பகுதியில் வைத்து இவ்வாறு த.தே.மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட சுரேஸ் வாகரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு