Thursday 25th of April 2024 03:40:18 AM GMT

LANGUAGE - TAMIL
.
வடமராட்சி யாக்கரு: 1500 லீட்டர் கோடா மீட்பு! - கே.கே.எஸ். குற்றத்தடுப்பு பிரிவு அதிரடி!

வடமராட்சி யாக்கரு: 1500 லீட்டர் கோடா மீட்பு! - கே.கே.எஸ். குற்றத்தடுப்பு பிரிவு அதிரடி!


வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை யாக்கரு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டு 1500 லீட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை-யாக்கரு வயல் வெளியில் அமைந்துள்ள பற்றைக்காட்டு பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்தா கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பு இடம்பெற்று வந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு பிரதேசவாசிகள் எடுத்துச் சென்ற போதிலும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாதிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று சனிக்கிழமை (நவ-21) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தில் இருந்து 1500 லீட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் துன்னாலை பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து அருவி இணையத்திற்கு தகவல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், நெல்லியடி, வடமராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE