Thursday 18th of April 2024 06:25:36 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனாத் தொற்று!

கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனாத் தொற்று!


யாழ். பரிசோதனைக் கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பெண் ஒருவர் உட்பட்ட இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து கிளிநொச்சி மரண வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா

கிளிநொச்சியில் நடைபெற்ற மரணச் சடங்கு ஒன்றுக்காக கொழும்பிலிருந்து வந்த பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக யாழ்.பரிசோதனைக் கூட முடிவுகள் தெரிவித்துள்ளன.

நேற்று கிளிநொச்சி திருவையாறு பகுதியில் நடைபெற்ற மரணச் சடங்கு ஒன்றுக்கு கொழும்பிலிருந்து ஒரு பெண் வந்திருப்பதாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து குறித்த பெண்ணை உடனடியாகவே சுகாதார உத்தியோகத்தர்கள் குறித்த பெண்ணை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி அவருக்கு பிசிஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீதிப்புனரமைப்புப் பணியாளருக்கு கொரோனா

கண்டாவளையில் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்றைய பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE