கொழும்பு கொரோனா தொற்றுநோயியலில் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிய பெண் இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரண்டரை வயது பிள்ளையுடன் தப்பி ஓடிய குறித்த பெண்ணை பிடிப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று இரத்தினபுரி எஹெலியகொட பகுதியில் வைத்து குறித்த பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் பிள்ளை அவருடைய வீட்டில் வைத்து நேற்றுக் காலை கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.