Friday 19th of April 2024 06:55:38 AM GMT

LANGUAGE - TAMIL
.
தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் நாளை முதல் விடுவிப்பு!

தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் நாளை முதல் விடுவிப்பு!


கொரோனாத் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் மேலும் சில பகுதிகள் நாளை முதல் விடுவிக்கப்பட இருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக, நாளை காலை 5 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் பொரள்ள, வெல்லம்பிட்டிய, கோட்டை மற்றும் கொம்பனிதெரு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தல் ஜாஎல மற்றும் கடவத்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாகவும் அதனடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும் இராணுவத் தளபதி மேலம் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE