பலாலி அன்ரனிபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து இரண்டு துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட எறிகனை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த காணியின் உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்யும் போது அங்கு குண்டுகள் இருப்பதனை அவதானித்துள்ளார். உடனடியாக துப்புரவு பணியை நிறுத்திவிட்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குண்டுகளை செயலிழப்பதற்காக வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள தரவை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்