Thursday 25th of April 2024 01:03:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் இன்றும் நால்வர் மரணம்!

இலங்கையில் இன்றும் நால்வர் மரணம்!


இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா மரணங்களின் தொடராக மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் ஆண்கள் இருவர், பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை ​சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும், பொரளை பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE