Thursday 25th of April 2024 08:34:40 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் கொரோனாத் தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனாத் தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 391 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 162 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16ஆயிரத்து 643 அதிகரித்துள்ளது.

இதுவரை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 14 ஆயிரத்து 069 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

6 ஆயிரத்துப் பத்துப் பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் 83 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE