Wednesday 24th of April 2024 06:46:37 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா நிலவரம்; மாநில முதல்வர்களுடன்  நாளை ஆலோசனை நடத்துகிறார்  இந்தியப் பிரதமர்!

கொரோனா நிலவரம்; மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் இந்தியப் பிரதமர்!


கொரோனா வைரஸ் தொற்று நோய் நிலவரம் குறித்து மாநில முதல்வர்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அடிக்கடி மாநிலங்களில் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதன்போது மாநிலங்களின் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிவதுடன், தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளையும் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் அவர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இணைய வழி நேரலையில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.

கொரோனா தடுப்பூசி ஒன்று பாவனைக்கு வந்தால் அதனை விநியோகிக்கும் திட்டம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE