"ஆதாரமற்ற போலிச் செய்திகளை வெளியிடும் பதிவு செய்யப்படாத இணையத்தளங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது."
- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துதார்.
குறித்த இணையத்தளங்களைச் தடை செய்வது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை எனவும், இது குறித்து ஆராயப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"ஒருவருக்கு எதிராக அவதூறு சுமத்தும் நோக்கத்துடன் பதிவு செய்யப்படாத பல இணையத்தளங்கள் சேற்றை வாரியிறைக்கும் தகவல்களை வெளியிடுகின்றன .
எந்த உத்தியோகபூர்வ வழிமுறைகளிலும் பதிவு செய்யப்படாத வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இந்த இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கருதுகின்றது" - என்றார்.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை