Friday 29th of March 2024 06:23:14 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழகத்தில் படகுடன் கரையொதுங்கிய வல்வெட்டித்துறை இளைஞர்!

தமிழகத்தில் படகுடன் கரையொதுங்கிய வல்வெட்டித்துறை இளைஞர்!


யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழகம் கோடியக்கரையில் கரையொதுங்கியுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

40 கோஸ்பவர் இயந்திரம் பொருத்தப்பட்ட குறித்த படகினை தமிழக கரையோர காவல்படையினர் கண்ணுற்று விசாரித்தபோது மீன்பிடிக்க வந்தபோது திசைமாறி தமிழக பகுதிக்குள் வந்துவிட்டதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

தான் வல்வெட்டித்துறை, ஆதிகோயிலடி பகுதியைச் சேர்ந்த விஜயமூர்த்தி கலைச்செல்வன் (வயது 29) என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த இளைஞரை காணவில்லை என்று வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தாரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE