ஒன்ராறியோ - மிசிசாகாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் மூவா் காயமடைந்தனர்.
ஹூரோன்டாரியோ மற்றும் டன்டாஸ் வீதிகளில் உள்ள ஒரு வணிகளத்தில் இரவு 9 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அவசர குழுவினருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு பொலிஸ் அதிகாரிகள் வந்தபோது அங்கு மூன்று ஆண்கள் கடுமையான கத்திக் குத்துக் காயங்களுடன் காணப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 29 மற்றும் 45 வயதான இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்களின் நிலை ஓரளவு சீரடைந்தது.
37 வயதான மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்தில் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாக நட்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவா்கள் கூறினர்.
சம்பவ நேரம் கத்திக்குத்து இடம்பெற்ற பகுதியில் இருந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.