வவுனியா செட்டிகுளம் காந்திநகர் பகுதியில் பன்றிகள் நுழையாது தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறிந்த நபர், பன்றிகளிடம் இருந்து தன் தோட்டப் பயிர்களைப் பாதுகாப்பதற்க்காக, பாதுகாப்பற்ற முறையில் மின்சார வேலிகளை அமைத்திருக்கிறார். இதேவேளை இன்று பிற்பகல் தவறுதலாக இம்மின்சார வேலியில் அகப்பட்டுகொண்டே இவ்வாறு அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா