'பவன' தாழமுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட 'நிவர்' புயல் வலுவிழந்து கடந்து சென்றிருந்த போதிலும் அதன் தாக்கமாக கொட்டித்தீர்த்த மழைக்கு யாழ். மாவட்டத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தினால் யாழ் மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுக்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
குறித்த 15 பிரதேச செயலர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 1424 குடும்பங்களைச் சேர்ந்த 5040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரியராஷ் தெரிவித்தார்.
மேலும் தற்போது நிலை கொண்டுள்ள தாழமுக்கத்தின் தாக்கத்தினால் கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும், யாழ் மாவட்டத்தில் குறிப்பாக மீன்பிடித் தொழிலுக்கு செல்பவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும் எனவும் அத்தோடு கரையோரப் பகுதி மக்கள் மற்றும் கரையோரத்தை அண்டிய மக்கள் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
யாழ் மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்க பெற்றிருகின்றது எனினும் இதுவரையில் சூறாவளி அபாயம் இல்லை.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கடும் மழை காற்றின் தாக்கத்தின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவினையும் உள்ளடக்கியதாக 1424 குடும்பங்களைச் சேர்ந்த 5040 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள். அத்தோடு 444 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கடும் மழை மற்றும் காற்றினால் சிறு நடுத்தரத் தொழில்கள் முயற்சியாளர்கள் 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
தாழமுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்