விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நாடாளுமன்றத்தில் இன்று பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தலைவர் பிரபாகரனுக்கு 66ஆவது பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.
மகாவலி திட்டத்தின் எல் வலயத்தின் கீழ் வடபகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய சார்ள்ஸ் எம்.பி., அவ்வாறு சிங்கள அரசால் பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்துதான் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார் எனவும் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை