யாழ்.பல்கலைக்கழக பரிசோதனைக் கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் குறித்த தகவலை அருவிக்குத் தெரிவித்தன.
எழுபது பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எழுபது பேரும் வடக்கின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது.
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்