கொரோனத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து சிலாபம் பொலிஸ் பிரிவில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளுக்கு பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து சிலாபம் காவற்துறை பிரிவுக்குற்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகளுக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, ஏகொடவத்த கடற்கரை, வடக்கு கடற்கரை, தென் கடற்கரை, குருசபாடுவ மற்றும் வெரலபட ஆகிய கிராம சேவக பிரிவுகளுக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை