Thursday 18th of April 2024 06:03:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையில் கடலாமை வைத்திருந்த நபர் கைது!

ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையில் கடலாமை வைத்திருந்த நபர் கைது!


ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடலாமை பிடித்து வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அமைய மெலிஞ்சிமுனை பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20Kg கடலாமை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கடலாமை இணை நீரியல்வள அதிகாரிகளின் உதவியுடன் ஆழ்கடலில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட முதியவரை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE