Thursday 25th of April 2024 11:34:41 AM GMT

LANGUAGE - TAMIL
.
வட்டுக்கோட்டை: வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் சாரதியும் தனிமைப்படுத்தல்!

வட்டுக்கோட்டை: வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் சாரதியும் தனிமைப்படுத்தல்!


கொழும்பில் இருந்து உறவினர் ஒருவரை அழைத்து வந்த தகவலை மறைத்திருந்த வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அவரது சாரதியும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து தெரியவருகையில்,

வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொழும்பில் உள்ள உறவினர் ஒருவரை தமது வாகனத்தில் சென்று நேற்று முன்தினம் அழைத்து வந்துள்ளார்.

இது குறித்த தகவல் சுகாதரப் பிரிவினருக்கு குறித்த பிரதேச சபை உறுப்பினரால் தெரியப்படுத்தப்பட்டிருக்காத நிலையில் பிரதேசவாசிகள் மூலம் குறித்த பகுதி சுகாதார பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அருவி இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து குறித்த பகுதி சுகாதார பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த பிரதேச சபை உறுப்பினரும்இ அவரது சாரதியும் குடும்பத்துடன் நேற்று (நவ-28) முதல்) சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE