யாழ்ப்பாண குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இல்லை என்றும், மக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காரைநகர் தொற்றாளர் தொடர்பில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பில் யாழ் குடாநாடு மீண்டும் முடக்கப்படலாம் என சில பத்திரிகைகள் பிரதான செய்தியாக வெளியிட்டிருந்த நிலையில் மக்களிடம் அது தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, யாழ்ப்பாண குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இல்லை என்றும், மக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானம் என சில பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் அது பிழையான செய்தி என தெரிவித்த வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், அவ்வாறு எந்த எந்த ஒரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் காரைநகர் பகுதியில் அவரிடம் நேரடியாக தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப் படுத்தலுக்குட்படுத்தப் பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு நாளைய தினம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த பிசிஆர் பரிசோதனை முடிவில் பலருக்கு தொற்று இனங் காணப்பட்டால் மாத்திரமே சில வேளைகளில் காரைநகர் பிரதேசம் முடக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.
எனினும் அது தொடர்பில் தற்போது வரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
யாழ் குடாநாட்டை முடக்குவது தொடர்பில் சுகாதார பிரிவினரால் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. சில பத்திரிகைகளில் சில தவறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தியின் ஊடாக பொது மக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்