கொரோனாத் தொற்று பரவல் காரணமாக தம்புள்ளை கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மூன்று பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து தம்புள்ளை கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை திங்கட் கிழமை (நவ-30) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தம்புள்ளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சித்தார விதானகே குறிப்பிட்டார்.
பொருளாதார மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளின் போது குறித்த மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுமார் 200 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கலஹா, எப்பாவல மற்றும் கலேவல ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று பேருக்கே கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் பொருளாதார மத்திய நிலையத்திற்கு சென்றிருந்த மூன்று கடைகள் மூடப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம்